For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் ஒரு கொடூரம்... புதுவை கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பிய சக மாணவன்!

By Mathi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: தமிழகத்தில் ஒருதலைக் காதல் விவகாரங்களால் அடுத்தடுத்து படுகொலைகள் நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புதுவையிலும் கல்லூரி மாணவியை உடன் படிக்கும் சக மாணவரே கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, விழுப்புரம், கரூர், தூத்துக்குடி நகரங்களில் அடுத்தடுத்து ஒருதலைக் காதலால் இளம்பெண்கள் வெட்டிப் படுகொலை செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. தாம் காதலித்துவிட்டேன் என்ற காரணத்தாலேயே அந்த பெண்களை படுகொலை செய்யும் வக்கிரத்துக்கு முடிவே இல்லையா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறது இப்படுகொலைகள்..

Pudhuvai girl stabbed by Collegemate

தற்போது புதுச்சேரி உசுத்தேரியில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி ஹேனா கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அவரை கத்தியால் குத்தியது சக மாணவரான எழிலரசன்..

ஹேனாவை கத்தியால் குத்திவிட்டு அவர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். தொடரும் இத்தகைய சம்பவங்கள் பெண்கள் வெளியே நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

English summary
In Pudhucherry College Student Hena stabbed by her collegemate Ezhilarasan today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X