புதுச்சேரியில் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் 72ஆவது சுதந்திர தினம் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வண்ணமய விழாவில் முதல்வர் நாராயணசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாட்டின் 72ஆவது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வண்ணமய விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உள்ளிட்ட பல்துறை, அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து காவல்துறை, கமாண்டோ படை, முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர்படை, பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில கலைஞர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைசெயலாளர், காவல்துறை தலைவர், மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவை முன்னிட்டு இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.