For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக்கு விரைந்து ஏற்பாடு செய்யுங்கள்... பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி மக்களும் ஜல்லிக்கட்டை விரும்புவதாக அவர் குறிப்பிட்

Google Oneindia Tamil News

புதுச்சேரி: ஜல்லிக்கட்டு தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளா. அதில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய போராட்டம் தற்பொது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

Puducherry Chief Minister Narayanasamy writes letter to Prime Minister Modi

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆங்காங்கே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடையடைப்புகளும் ரயில் மறியல்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்.

தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நேசிக்கிறார்கள். எனவே ஜல்லிக்கட்டுக்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Puducherry Chief Minister Narayanasamy writes letter to Prime Minister Modi. CM Narayanasamy says that Puducherry People also loves Jallikattu. So take fast acction to conduct Jallikattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X