For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழில் போட்டியால் சொந்தக் கட்சிக்காரரே குண்டு வீசி கொலை.. என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் கைது!

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் வேலழகன். அவரை தொழில் போட்டியின் காரணமாக, சிவராமன் மற்ரும் ரமேஷ் ஆகியோர் கொலை செய்தனர். அவரை கொலை செய்ய உதயகுமார் என்ற மற்றொரு என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர்

By Suganthi
Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகரும் தொழிலதிபருமான வேலழகன் கொலை வழக்கில் குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வேலழகன். இவர் பல்வேறு தொழில்கள் செய்துவருகிறார். கட்சிப் பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். இந்நிலையில், அவர் கடந்த 19ஆம் தேதி அவருடைய நிலத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது, சிலர் அவர் மீது நாட்டுக்குண்டு வீசினர். அதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 In Puducherry N.R congress Velalagan murdered and accused arrested

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள் நடத்திய புலன் விசரணையின் மூலம், சிவராமன், ரமேஷ் என்கிற வெட்டு கார்த்தி அகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் விசாரணை நடத்தியில் தொழில் போட்டி காரணமாக, செங்கதிரவன், உதயகுமார் ஆகிய இருவரின் தூண்டுதலின் பேரில்தான் கொலை செய்தோம் என கூறியுள்ளனர்.

அதனையடுத்து போலீசார் இந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உதயகுமாரும் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் என்பதும் அவரும் தொழிலதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
In Puducherry N.R congress Velalagan murdered on 19th April 2017. CBCID police arrested 4 persons who involved in this murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X