For Daily Alerts
Just In
”சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்போம்” – வீடுதோறும் மரக் கூடுகள் வழங்கிய புதுவை இளைஞர்கள்
புதுவை: புதுவையில் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்கும் வகையில் புதுவையில் வீடுதோறும் மரத்தினாலான கூடுகளை இளைஞர்கள் இலவசமாக வழங்கியுள்ளனர்.
நேற்று உலக சிட்டுக் குருவி தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சிட்டுக்குருவிகள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் புதுவையில் இளைஞர் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மரத்தினாலான கூடுகள் வீடுதோறும் வழங்கப்பட்டன.
சிட்டுக்குருவி இனத்தின் வளர்ச்சிக்காகவும் அதனை பாதுகாப்பது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூடுகளை வழங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் சிட்டுக்குருவி வசிப்பது குடும்ப வளர்ச்சிக்கு உகந்தது என்ற நம்பிக்கை இன்றும் மக்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
Comments
English summary
Puduvai young people’s NGO gave sparrow nest for all the hoses there for “sparrow day” awareness.
Story first published: Saturday, March 21, 2015, 14:41 [IST]