வதந்திகளை நம்பாதீர்.. ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு விற்பனை தொடரும்- அமைச்சர் காமராஜ்
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். விலையில்லா அரிசி திட்டம் தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரேஷன் பொருட்கள் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதிர் எள்ளளவும் உண்மையில்லை என அவர் கூறினார்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு மற்றும் பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விலையில்லா அரிசி வழங்கும் திட்டமும் தொடர்வதாக அவர் கூறியுள்ளார்.
விலையில்லா பொருட்கள் தொடரும்
குடும்ப அட்டைதாரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கோதுமை வழங்கப்படும் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். அனைத்து விலையில்லா பொருட்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
தேவையில்லாத வதந்திகள்
உணவுப்பாதுகாப்பு திட்டத்தில் இணைந்தாலும் பொது விநியோகத் திட்டம் தொடரும் என்றார். உள்நோக்கத்துடன் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு நிபந்தனை
அரிசி வழங்குவதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் பொது விநியோகத்திட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் இருப்பு உள்ளன என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார்.
பருப்பு நிறுத்தம் - மறுப்பு
நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து உணவுத்துறை அமைச்சர் கமராஜ் இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார். பருப்பு, பாமாயில் நிறுத்தப்பட்டுள்ளது என வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.