திமிங்கலங்களை கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சி தோல்வி
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
திருச்செந்தூரை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் நேற்று முதல் நூற்றுக்கணக்கான சிறிய திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வருகின்றன.
மணப்பாடு முதல் இடிந்தகரை வரை கடலோரமாக நூற்றுக்கணக்கில் சிறியதும், பெரியதுமாக திமிங்கலங்கள் ஒதுங்கி வருகின்றன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவற்றை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சி பலன் தரவில்லை. கடலுக்குள் திருப்பி அனுப்பப்பட்ட அவை மீண்டும் கரைக்கே திரும்பின.
கரை ஒதுங்கும்போது அவை மணலில் உருள நேர்ந்ததாலும்,அவற்றை கடலுக்குள் திருப்பி அனுப்ப எடுத்த முயற்சியாலும் அவற்றின் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மீன்வளத்துறையினர் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.