For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகை ராதிகா 4 கோடி வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டாரா? - வீடியோ

வருமான வரித்துறை அதிகாரிகள் நடாத்திய விசாரணையில் நடிகை ராதிகா 4 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: நடிகை ராதிகா 4 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் விசாரணைக்கு ராதிகாவும் சரத்குமாரும் வர வேண்டும் என அதிகாரிகள் அவர்களிடம் கூறியுள்ளனர்.

கடந்த 7ஆம் தேதி, வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளில் சோதனை மேற்கொண்டது.

 Radhika Cheated income tax in Radaan

இதில் சரத்குமாரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது முக்கிய ஆவணங்கள் கிடைத்ததையடுத்து, அவரது மனைவி ராதிகாவின் ராடன் மீடியா ஒர்க்ஸ் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதனால் ராதிகா, சரத்குமார் இருவரையும் நேற்று விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியது வருமானவரித்துறை. அதையடுத்து ஆஜாரன அவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில் ராடன் மீடியா ஒர்க்ஸ்ஸில் ராதிகா 4 கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதனால் ராதிகா, சரத்குமார் இருவரும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வருமானவரித்துறை அதிகாரிகள் அவர்களிடம் கூறியுள்ளனர்.

English summary
RAdhika's Radaan media works office been raided by income tax officials. Radhika accepted that she cheated for Rs. 4 cr of income tax. She may be again go for an inquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X