For Daily Alerts
Just In
மழை, வெள்ளம்: ரயில் பயணத்தில் ஒரிஜினல் அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்யலாம்
சென்னை: மழையின் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் அடையாள அட்டையின்றி பயணிக்க தெற்கு ரயில்வே வசதி செய்து உள்ளது.
கடந்த சில வாரங்களாக சென்னையில் பெய்த கனமழைக்கு ஏராளாமானோர் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முன் பதிவு செய்து ரயிலில் பயணம் செய்வோர் அசல் அடையாள அட்டையை காண்பிக்க தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே முதன்மை வர்த்த மேலாளர் அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் அசல் அடையாள அட்டையை காண்பிக்கமாறு டிசம்பர் 22 ஆம் தேதி வரை வலியுறுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments
English summary
Due to rain the rail passengers can travel without orginal id cards
Story first published: Thursday, December 10, 2015, 1:11 [IST]