ஆங்காங்கு மறியல்கள்.. சென்னை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கம் #tamilnadubandh
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் விவசாய சங்கங்கள் அழைப்புவிடுத்த முழு அடைப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தலையிட கோரி மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடும் என்ற காரணத்தால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ரயிலும் மத்திய அரசுத்துறையின் அங்கம் என்பதால் போராட்டக்காரர்கள் ரயில் மறியலை ஆயுதமாக கையிலெடுத்துள்ளனர். ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் என பல்வேறு அரசியல் தலைவர்களும், ரயில் மறியல் போராட்டங்களை நடத்த முற்பட்டு கைது செய்யப்பட்டனர்.
அதேநேரம் தொண்டர்கள் ஆங்காங்கு ரயில் மறியல் போராட்டம் நடத்துகிறார்கள். குறிப்பாக சென்னையில் அதிக போராட்டங்கள் நடக்கின்றன. ரயில் மறியல் போராட்டங்கள் காரணமாக சென்னை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் லேசான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.