உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள் – திருநங்கைகளுக்கு ரயில்வே அறிவுரை
சென்னை: ரயில் பயணிகளிடம் திருநங்கைகள் பணம் கேட்டுத் தொல்லை தருவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. இதனையடுத்து ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை இணைந்து திருநங்கைகளுக்கான கலந்துரையாடல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நேற்று நடந்த கூட்டத்தில், "பயணிகளிடம் அத்துமீறும் திருநங்கைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் பயணிகளுக்கு திருநங்கைகள் தொல்லை தரக்கூடாது. தங்கள் மரியாதையை தாங்களே குறைப்பது போன்று திருநங்கைகள் நடந்து கொள்ளக் கூடாது.
சமூகத்தின் தாங்களும் ஒரு அங்கம் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில் தங்கள் செயல்பாடுகள் கண்ணியமாக இருக்க வேண்டும். மேலும் திருநங்கைகளுக்கு மற்ற பயணிகளால் தொல்லை ஏற்பட்டாலும் உடனடியாக உதவி மைய எண்கள் மூலம் புகார் அளிக்க வேண்டும்.
அந்தப்புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டன. கூட்டத்தில் திருநங்கைகள், அவர்களுக்கான அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.