இன்று வட மாவட்டங்களில் மழை நிச்சயம்...!
சென்னை: இன்று வட தமிழக மாவட்டங்களில் மழை நிச்சயம் பெய்யும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்க கடல் பகுதியில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆந்திராவின் வடக்கு பகுதி நோக்கி நகர்ந்துவிட்டது. இதன் காரணமாக இன்று தமிழகத்தின் வடமாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல ஏரிகள், குளங்கள் ஓரளவுக்கு நிரம்பி வருகின்றன. அடுத்த (அக்டோபர்) மாதம் 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இன்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலும் இன்று மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளனர்.