மழையால் பாதிப்பா, மின்சார வயர் அறுந்து கிடக்கிறதா? ஹெல்ப்லைன் எண்கள் அறிவிப்பு
சென்னை: கனமழை காரணமாக ஏற்படும் இயற்கை பேரிடர்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம் உதவி எண்களை அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடும் சூறைக்காற்றுடன், கனமழை கொட்டி வருகிறது.
மழை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து தப்பிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மழையால் ஏற்படும் இடர்பாடு குறித்து தகவல் தர, பொதுமக்கள், 1913 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மின்வயர் அறுந்து விழுந்து கிடப்பதை பார்த்தால், உடனடியாக, 1077 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
குடிநீர், மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகளுக்காக, 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், மழையால் பாதிக்கப்பட்டோரை தங்க வைக்க வார்டு வாரியாக தற்காலிக தங்கும் வசதியை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.