For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்னியாகுமரி முதல் திருவண்ணாமலை மாவட்டங்கள் வரை பரவலாக மழை.. மக்கள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று, திருவண்ணாமலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் வரை பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்தது.

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், பார்வதிபுரம், புத்தேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில், நெல்லை நகரிலுள்ள, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் அருகேயுள்ள பகுதிகளில் மழை பெய்தது.

Rain in many parts of the Tamilnadu

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளிலும், பெரம்பலூர் மாவட்டத்தில், கோனேரிபாளையம், சிறுவாச்சூர், பகுதிகளில் இடி, மின்னலுடன் நல்ல மழை பெய்தது.

கும்பகோணம், நாஞ்சிக்கோட்டை திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும், திருவண்ணாமலை மாவட்டம்த்தில், வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

தமிழகம் முழுக்க பரவலாக பெய்துள்ள மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

English summary
In Tamil Nadu, rains have been lashes several districts today, from Thiruvannamalai to Tirunelveli and Kanyakumari districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X