அலுவலகங்களுக்குள் புகும் வெள்ளம்.. கன மழையால் சென்னை ஐடி நிறுவனங்கள் அரை நாள் விடுமுறை அறிவிப்பு
சென்னை: தொடர் மழை காரணமாக, சென்னையிலுள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதி நாளிலேயே வீடு திரும்ப அனுமதித்துள்ளன.
தென்சென்னை பகுதியில் இன்போசிஸ், டிசிஎஸ், மகேந்திர சிட்டி போன்ற பிரபல ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இன்று பெய்துவரும் கன மழையால், இன்போசிசின் இரு அலுவலகங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. மகேந்திரா சிட்டி கேம்பசிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களிலும், வெள்ள நீர் வடிகால் சிறப்பாக செய்யப்பட்டிருந்தபோதிலும், பெரிய அளவில் மழை பெய்ததால் அதை வெளியேற்ற முடியாமல் நீர் தேங்கிவிட்டது.
Smooth flow of traffic on GN Chetty Road. #chennairains pic.twitter.com/35oZnaQyNP
— Subadra (@SoBadRa) December 1, 2015
சாலைகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், தங்கள் ஊழியர்கள் பாதுகாப்பை கருதி, ஐடி நிறுவனங்கள் அரை நாள் விடுமுறை கொடுத்து அனைவரையும் வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்திவிட்டன.
ஏற்கனவே, முக்கிய பணிகள் பலவற்றை பெங்களூரிலுள்ள தங்களது கிளைகள் மூலமாக நிறைவேற்றிக்கொள்ள மேற்கண்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன. முக்கிய ஊழியர்களை பெங்களூருக்கும் அனுப்பி வைத்துள்ளன.