For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் மழை ஆரம்பிக்கும்... வானிலை மையம் எச்சரிக்கை!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கடும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஒருவாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வந்தது. இந்த மழை காரணமாக சென்னை, கடலூர், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்கள் என பல பகுதிகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டது.

Rain is likely to lash Tamilnadu for two more days

பல இடங்களில் இதனால் வெள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த நான்கு நாட்களாக தமிழ்நாட்டில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று பல இடங்களில் வெயில் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் மாலை நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது. தற்போது இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இருக்கிறது. இது நிமிடத்திற்கு நிமிடம் வலுவடைந்து கொண்டே செல்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English summary
Rain is likely to lash Tamilnadu for two more days. The new storm in Indian ocean may cause heavy rain for two more days in Chennai and Coastal areas of Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X