சென்னையை 4வது நாளாக மாலையில் குளிப்பாட்டிய மழை!
சென்னை: சென்னையில் கடந்த சில தினங்களை போலவே, தொடர்ந்து இன்று மாலையும் மழை பெய்தது.
கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மிதமான மழை சென்னையை குளிப்பாட்டிச் செல்கிறது. இன்றும், அதேபோல மாலை 6.30 மணியளவில் தொடங்கி, நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
நகரின், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், ராமாவரம், சைதாப்பேட்டை, தி.நகர், அடையாறு, வேளச்சேரி, ஈக்காடுந்தாங்கல், ஆழ்வார்பேட்டை, மடிப்பாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதமான காற்று காரணமாக குளுமையான தட்பவெப்பம் நிலவியது. விடாமல் மழை பெய்ததால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
4வது நாளாக மாலை நேரத்தில் மட்டும் பெய்த இந்த தொடர் மழையால் மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
அதேநேரம், மாலையில் அலுவகம், பள்ளி, கல்லூரி முடித்து வீடு திரும்புவோர் இதனால் அவதிப்பட்டனர்.
சென்னையில் இடியுடன் வெளுத்து வாங்கும் மழை.. பல இடங்களில் டிராபிக் நெரிசல் #chennairains pic.twitter.com/6j7FzaL5RR
— Oneindia Tamil (@thatsTamil) July 13, 2018
காசி திரையரங்கம், திரு வி.க.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், உதயம் தியேட்டர், வட பழனி கமலா தியேட்டர், செம்மொழி பூங்கா முதல் எம்.ஓ.பி வைண்ஷவ் பெண்கள் கல்லூரி பகுதி, அடையாறு இந்திராநகர் முதல் துரைப்பாக்கம் வரையிலான சாலைகளில் போக்குவரத்து விழி பிதுங்கியது. இதனிடையே இரவு 7.15 மணிக்கு மேல் பல பகுதிகளிலும் மழை வெறிக்க துவங்கியது. இதன்பிறகு, போக்குவரத்து, படிப்படியாக மேம்பட்டது.