For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை மற்றும் புற நகரங்களில் இடியுடன் கனமழை

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம், தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

வெப்பச்சலனம் உருவாகி உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain lashes guindy, nungambakkam in chennai

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் இரவில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் சைதாப்பேட்டை, மீனம்பாக்கம், தரமணி உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

விருகம்பாக்கம், கிண்டி, கே.கே.நகர், திருவான்மியூர், வேளச்சேரி, தரமணி, பல்லாவரம், தாம்பரம், கீழ்கட்டளை, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பூவிருந்தவல்லி, குன்றத்தூர், போரூர், எழும்பூர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

English summary
Heavy rain lashes Chennai,guindy, nungambakkam and some other places
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X