அடுத்த 2 நாளைக்கு சென்னை உள்பட தமிழகத்தை குளிர வைக்கப்போகும் மழை.. வானிலை மையம்
சென்னை: வெப்பச்சலனம் மற்றும் காற்று மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மக்கள் கடும் வெயில் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறார்கள். இந்த சூழலில் கடந்த சில தினங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சூழலில் அடுத்த 2 நாளுக்கு சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழர்கள் கோழைகளா.. சுயநலவாதிகளா.. நான் சொல்லலீங்க.. பல்டி அடித்த கிரண் பேடி
வெப்பச்சலனம் மற்றும் தென் மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டத்தின் மலை சார்ந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோல் காஞ்சிபும், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த மழை காரணமாக தமிழகத்தில் வெயில் பல்வேறு இடங்களில் குறைந்துவிடும் என்பதோடு, பல்வேறு பகுதிகள் குளுமையாக மாற வாய்ப்பு உள்ளது.