காலைமுதல் மின்சாரம் கட்.. அவசர உதவி கேட்க செல்போனில் சார்ஜ் இன்றி சென்னை புறநகர்வாசிகள் தவிப்பு
சென்னை: மழையால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக, சென்னை புறநகர் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள்.
No power since last night. Rain water flooding inside my apartment. Now inverter is dead. What next? #ChennaiRains pic.twitter.com/BuYROrtiMb
— T.S.Suresh (TS) (@editorsuresh) December 1, 2015
சென்னையில் இன்று பலத்த மழை கொட்டி வருகிறது. புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இதனால் புறநகர் பகுதிகளில் காலை முதல் மின் இணைப்பை மின்வாரியம் துண்டித்துள்ளது.
கடந்த வாரங்களில் பெய்த மழையின்போது, மின்சார வயர் துண்டித்து விழுந்ததால், சிலர் உயிரிழந்தனர். அதுபோன்ற அசம்பாவிதங்கள் இப்போது ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
@chennaiweather ...kathipara water gushing pic.twitter.com/7XdJak91qj
— DaranK (@daran_k) December 1, 2015
அதேநேரம், செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிடுவதால், அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள முடியாமல், புறநகர் மக்கள் கஷ்டப்பட்டுவருகிறார்கள்.