வட சென்னையில் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையின் வட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் மக்கள் குஷியடைந்துள்ளனர்.
சென்னையில் இந்த கோடை காலத்தில் பெரிய அளவில் மழை இல்லை. மாநிலமெங்கும் பெய்த மழை குறித்த செய்திகளால் சென்னை மக்கள் கடுப்பாகி இருந்தனர். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. ஆனாலும் வெக்கை போகவில்லை.
இந்த சூழ்நிலையில் இன்று மாலைக்கு மேல் வட சென்னை பகுதிகளில் கன மழை கொட்டத் தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்து விட்டது. இதனால் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வண்ணாரப்பேட்டை, எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. திருவொற்றியூர் ஹை ரோடு நெடுகிலும் நல்ல மழை பெய்து வந்தது. இந்த,சீசனில் பெய்த முதல் கன மழை என்பதால் மக்கள் குளிர்ச்சி அடைந்துள்ளனர். வானிலையும் படு வேகமாக குளிர்ச்சிக்கு மாறியுள்ளது.