கையில் எப்பவும் குடை வச்சிக்கோங்க... இன்னும் 2 நாளைக்கு மழை நீடிக்குமாம்!
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. லட்சத்தீவு பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக குறிப்பாக கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய அதிகாரி கூறுகையில், ‘இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) அதாவது மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்' என்றார்.
நேற்று காலை 8-.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-
நாகர்கோவில் 11 செ.மீ., பொன்னேரி 9 செ.மீ., கீரனூர், மைலாடி, வேதாரண்யம், தலா 8 செ.மீ., மயிலாடுதுறை, நன்னிலம் தலா 7 செ.மீ., முத்துப்பேட்டை, பேச்சிப்பாறை, குழித்துறை தலா 6 செ.மீ., கிருஷ்ணகிரி, தொழுதூர், சின்னக்கள்ளார், ஊட்டி தலா 5 செ.மீ., திருவாரூர், திருவாடானை, குளித்தலை, பூதப்பாண்டி, தக்கலை, தஞ்சாவூர் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.