For Daily Alerts
Just In
வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... தமிழகத்தில் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே தமிழகம் மற்றும் புதுவையில் அவ்வப்போது மழையும், பின்னர் வெயிலும் என மாறி மாறி வானிலை காணப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தின் சில இடங்களிலும், உள் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரம், மாதவரம், புதுச்சேரியில் தலா 2 செ. மீ மழை பெய்துள்ளது.
Comments
English summary
The metrological department has announced that in Tamilnadu rain will continue for next 24 hours.