வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையிலும் வெயில் கொளுத்தி வருகிறது.
வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 4 நாட்கள் வரை அதிகமாக காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் ஒரு செ.மீ., மழை பதிவாகியுள்ளது.