For Daily Alerts
Just In
2ஜி தொடர்பான புத்தகத்தை கருணாநிதியிடம் வழங்கினார் ஆ.ராசா!
2ஜி தொடர்பாக தான் எழுதிய புத்தகத்தை கருணாநிதியிடம் வழங்கினார் ஆ.ராசா.
சென்னை: 2ஜி தொடர்பாக தான் எழுதிய புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் வழங்கி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா.
திமுக கட்சியை சேர்ந்த ஆ.ராசா கடந்த 20ம் தேதி தன்னுடைய '2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். 2ஜி வழக்கின் உண்மையான விவரங்கள் குறித்து இவர் அதில் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இந்த புத்தகத்தை திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆ.ராசா கொடுத்துள்ளார். அவர் வீட்டிற்கு சென்று புத்தகத்தை வழங்கி இருக்கிறார்.
இதுகுறித்து டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அதில் ''சமீபத்தில் நான் எழுதி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா அவர்களால் புது டெல்லியில் வெளியிடப்பட்ட '2G Saga Unfolds' புத்தகத்தை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கி வாழ்த்து பெற்றபோது.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
Comments
English summary
Raja gives 2g saga unfolds book to DMK leader Karunanidhi. He went to his home and gave the book. He published the book, which deals with 2g case and its truth.
Story first published: Wednesday, January 24, 2018, 18:45 [IST]