For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி மக்கள் மன்றத்தில் இணைய ஈரோடு மாவட்ட பெண்கள் அதிக ஆர்வம்!

ரஜினி மக்கள் மன்றத்தில் இணைய ஏராளமான பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

By Lekhaka
Google Oneindia Tamil News

ஈரோடு: ரஜினி மக்கள் மன்றத்தில் இணைய ஏராளமான பெண்கள் ஆர்வமளித்து வருவதாக அம்மன்றத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

rajini has good support among women erode s rajini makkal mandram

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் பேர் ரஜினி மக்கள் மன்றத்தில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டுள்ளனர். இதில் 20 ஆயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் அதிக உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சாம்ராஜ் கலந்து கொண்டு அதிக உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்து பாராட்டு தெரிவித்தார். பெண்கள் மத்தியில் ரஜினிக்கு நல்ல ஆதரவு இருப்பதாகவும் ஏராளமானோர் இந்த அமைப்பில் பங்கேற்க உள்ளதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் தெரிவித்தனர்.

English summary
Erode district women reported that Rajini has good support among women and that a lot of people will participate in the Rajni's Makkal Mandram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X