ரஜினி, கமல் நினைப்பது போல தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை எளிதாக நிரப்ப முடியாது: நடிகை கவுதமி
ரஜினி, கமல் நினைப்பது போல தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். ஆனால் அதை ரஜினியோ, கமலோ நிரப்ப சாத்தியமில்லை என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் தங்கள் வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை கவுதமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ரஜினி மற்றும் கமலின் அரசியல் செயல்பாடுகள் குறித்தும், இருவரது அரசியல் பேச்சுகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கவுதமி, தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மைதான்.
ஆனால், அதை ரஜினியோ, கமலோ நிரப்ப முடியாது. அது நடைமுறையில் சாத்தியமில்லை. அந்த வெற்றிடத்தை யாராலும் ஒரே நாளில் நிரப்பி விட முடியாது என்று கவுதமி தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சியில் நேற்று இரவு நடந்த கர்ப்பிணிப் பெண் மரணமடைந்த சம்பவம் தன்னை வெகுவாகப் பாதித்து இருப்பதாகவும், இனியும் இது போன்ற செயல்கள் நடக்காமல் தடுக்க அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.