"சூப்பர் ஸ்டார்" ரஜினியுடன் மீண்டும் கை கோர்க்கும் பா. ரஞ்சித்.. தனுஷ் தயாரிக்கிறார்!
சென்னை: ஷங்கரின் 2.0 படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் பா.ரஞ்சித் படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தை நடிகர் தனுஷின் வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து பிளாக் பஸ்டர் படமாக வசூலில் சாதனை படைத்தது கபாலி. வெளிவருவதற்கு முன்பே இருந்து இப்படம் விளம்பர ரீதியாகவும், கமர்ஷியல் ரீதியாகவும் வசூல் மழை பொழிந்தது என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருந்தார்.
I'm so proud and honoured to announce our production's next film #WunderbarFilms pic.twitter.com/7T3tmy4Cre
— Dhanush (@dhanushkraja) August 29, 2016
கபாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.அதற்குப் பிறகு மீண்டும் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். படத்தை தனுஷின் வொண்டர்பார் பட நிறுவனம் தயாரிக்கிறது. இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்து இருக்கிறார் தனுஷ்.
Magizchi!!!! https://t.co/ou9tuw1tc5
— pa.ranjith (@beemji) August 29, 2016
ஆனால், இப்படம் கபாலியின் தொடர்ச்சியா? அல்லது புதுக்கதையா? என்பது குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை. இப்படத்தில் நடிக்கயிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.