குன்றத்தூர் விஜய்க்கு ஆறுதலோடு மன்ற பதவியையும் அளித்தார் ரஜினி
Recommended Video
சென்னை: குன்றத்தூர் அபிராமியின் கணவர் விஜய்க்கு ரஜினி மக்கள் மன்றத்தில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியைச் சேர்ந்த விஜய்யின் மனைவி அபிராமி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அபிராமிக்கு அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த 31-ஆம் தேதி இருவரையும் கொலை செய்து விட்டு தப்பியோடிய அவரை நாகர்கோவிலில் போலீஸார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அபிராமியின் கணவர் விஜய் ரஜினியின் தீவிர ரசிகர். விஜய்யின் குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து கேள்விப்பட்ட ரஜினி அவரை தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவழைத்தார். அவரை பார்த்து அழுத விஜயை தோளில் தட்டிக் கொடுத்து ரஜினி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து விஜயின் கவலையை மறக்கடிக்கும் விதமாக அவருக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் குன்றத்தூர் பகுதி இளைஞரணி இணை செயலாளர் பதவியை அளித்துள்ளார்.