இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து
பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வான இளைஞராஜாவுக்கு ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை: நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்ம விபூஷண் விருதை பெற்ற இளையராஜாவுக்கு ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் குடியரசு தினவிழாவையொட்டி பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பெற்றோர் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாரத ரத்னாவுக்கு அடுத்தபடியாக நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்விபூஷண் விருது வழங்கப்படவுள்ளது. இதற்கு திரைத்துறையினர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளன.
அதுபோல் இளையராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் கமலும் தனது டுவிட்டர் பக்கத்தில் எனக்கு மூத்தவர் என் இளையராஜாவுக்கு விருது. விருதுக்கான தகுதியை இவர் இளமையிலேயே பெற்றிருந்தார். தாமதமாய் வந்த பெருமையை ராஜா போல் ரசிகரும் மன்னிப்பர்.
விருதும் நாடும் தமிழகமும் பெருமை கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.