For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி அவமானம்:சென்னை பிரஸ் மீட்டில் 'யே' என கோபத்துடன் முகத்தை சுருக்கிக் கொண்டு கத்திய ரஜினி

சென்னை பிரஸ் மீட்டில் வெறித்தனமாக கத்தினார் ரஜினிகாந்த்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறிய ரஜினி!-வீடியோ

    சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் யார் நீங்க?ன்னு கேட்ட அவமானத்தை தாங்க முடியாமல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் 'வெறிபிடித்தவர்' போல கத்தி பேட்டியளித்தார் நடிகர் ரஜினிகாந்த்

    தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த ரஜினிகாந்த் விமான நிலையத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த நிலையில் அவமானத்தின் உச்சியில் நின்று பேட்டியளித்தார்.

    Rajinikanth loses his cool in Press meeet

    ஸ்டெர்லைட் போராட்டத்துக்குள் புகுந்தது சமூக விரோதிகள்; ஜல்லிக்கட்டு போல சமூக விரோதிகள் நுழைந்தனர். சமூக விரோதிகள் போலீஸை தாக்கியதால் பிரச்சனை வந்தது என்றார்.

    அத்துடன் தமிழக மக்கள் போராட்டம் போராட்டம் நடத்தினா தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றார். போலீஸ், அரசை ஆதரித்து பேசுகிறீர்களே என ஒரு செய்தியாளர் கேட்க, "யே யார்யா" என ஏக வசனத்தில் முகத்தை படுகோரமாக வைத்துக் கொண்டு வேற யாரு கேள்வி இருக்கா? என எரிச்சலடைந்து கேட்டு கோபமாக பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டார்.

    அரசியல் கட்சி தொடங்கி தலைவராகப் போகிறேன் என பேசும் ரஜினிகாந்த், நிலைகுலைந்து போய் பேசியிருப்பது தமிழகத்தை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.இப்படிப்பட்டவர் நமக்குத் தேவையா என்ற எரிச்சலையும் ஏற்படுத்தி விட்டது.

    English summary
    Actor Rajinikanth today lost his cool in Press meet at Chennai airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X