For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்.. திருமாவளவன் எச்சரிக்கை!

சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா இரண்டு நாட்கள் முன் சென்னையில் நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்கள், பல்வேறு பாஜகவினர், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ரஜினி, பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்துக்கடவுளுக்கு எதிராக பெரியார் பேரணி செய்தார். இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார். அப்போதைய முதல்வர் கருணாநிதி அதை கடுமையாக எதிர்த்தார்.இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது, என்று ரஜினி குறிப்பிட்டார்.

முரசொலியை யாரும் படிப்பதில்லை.. நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும்.. ஜெயக்குமார்! முரசொலியை யாரும் படிப்பதில்லை.. நமது அம்மா நாளிதழ் படித்தால் பொது அறிவு வளரும்.. ஜெயக்குமார்!

பெரிய சர்ச்சை

பெரிய சர்ச்சை

பெரியார் குறித்து ரஜினி பேசியது பெரிய சர்ச்சையாகி உள்ளது. பெரியாரின் போராட்டம் குறித்து ரஜினி சொன்ன கருத்துக்கள் சில தவறானது ஆகும். வரலாற்று ரீதியாக தவறாக சில தகவல்களை ரஜினி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பலரும் உண்மைகளை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

பெரியார் எப்படி

பெரியார் எப்படி

இந்த நிலையில் பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பெரியார் குறித்து ரஜினி பேசியது தவறு. அவர் பேசிய விஷயங்கள் நிறைய தவறானது. திரிக்கப்பட்டது. வரலாற்று விஷயங்களை படிக்காமல் ரஜினி பேசி இருக்கிறார்.

அவதூறு

அவதூறு

பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும். சமூகநீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டம் புரியும். பெரியாரை ரஜினி படித்து புரிந்து கொள்ள வேண்டும். அதன்பின் பேச வேண்டும்.

ரஜினி எப்படி

ரஜினி எப்படி

ரஜினியை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள். சங்பரிவார் சொல்வதை ரஜினி பேசுகிறார். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

English summary
Rajinikanth should not fell into Sangh Parivar trap says Thol. Thirumavalavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X