For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜீவ் வழக்கு: 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை

ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். மிகவும் கொடுமையான தண்டனையை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

Rajiv Assassination: Central Government should release 7 Tamilians from the jail says, Stalin

இதற்காக மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது. அதேபோல் இன்று 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

இதனால் தற்போது விடுதலை கோரிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி, 7 பேரை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விரைந்து நடவடிக்கை தேவை. இதற்காக மணிலா அரசுகளும் செயல்பட வேண்டும், என்றுள்ளார்.

English summary
Rajiv Assassination: Central Government should release 7 Tamilians from the jail says, DMK active leader Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X