For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலூர் சிறையில் முருகன் ஜீவசமாதி அடைய முயற்சி- 3வது நாளாக உண்ணாவிரதம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைய முயற்சிக்கும் வகையில் உண்ணாவிரதத்தை தொடருகிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் ஜீவசமாதி அடைய முயற்சிக்கும் வகையில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

வேலூர் சிறையில் உள்ள முருகன் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு சாமியாராகவே மாறிவிட்டார். அத்துடன் சிறை வாழ்க்கையை தொடர விரும்பவில்லை; ஜீவசமாதி அடைய விரும்புகிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு முருகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

Rajiv case convict Murugan continues to attain samadhi

கடந்த ஜூலை 26-ந் தேதி முதல் முருகன் ஒருவேளை உணவு மட்டுமே எடுத்துக் கொண்டார். கடந்த 18-ந் தேதி முதல் ஜீவசமாதி அடையும் முயற்சியாக நீரை மட்டும் குடிக்கிறார்.

இன்று 3-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். முருகனின் இந்த உண்ணாவிரதம் தொடர்ந்தால் அவர் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக சேர்க்கபப்டுவார் என்று வேலூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Rajiv Gandhi assassination case life convict Murugan has stopped taking food to attain jeeva samadhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X