For Daily Alerts
Just In
ராஜீவ் கொலை வழக்கு.. ரவிச்சந்திரன் பரோல் கேட்டு மனு
ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் பரோல் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் பரோல் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ரவிச்சந்திரன் பரோல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அக்டோபர் 27ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் சிறைத்துறை பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவிச்சந்திரன் கடந்த மார்ச் மாதம் 2 வாரம் பரோலில் வெளி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
rajiv murder case parole chennai high court ராஜீவ் கொலை வழக்கு ரவிச்சந்திரன் பரோல் சென்னை உயர்நீதிமன்றம்
English summary
Rajiv murder case: Ravichandran has applied Parole. High court seeks govt answer.
Story first published: Friday, October 12, 2018, 18:07 [IST]