சகாயத்தை முதல்வராக ரஜினி அறிவிக்க வேண்டும் - அடித்துக் கூறும் ஒன்இந்தியா வாசகர்கள்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கினால், முதல்வர் வேட்பாளராக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அறிவிக்க வேண்டும் என்று ஒன்இந்தியா தமிழ் இணையதள வாசகர்கள் உறுதிபடக் கூறியுள்ளனர்.
ரஜினி தனிக் கட்சி தொடங்கும் மன நிலைக்கு வந்துள்ளார். இதுதொடர்பாக ரசிகர்களுடன் முதல் கட்டமாக பேசியுள்ளார். சிஸ்டம் கெட்டுப் போயுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து வாதப் பிரதிவாதங்கள் களை கட்டியுள்ளன.
இந்த நிலையில், ரஜினி தனிக் கட்சி தொடங்கினால் தமிழக மக்கள் அனைவரும் விரும்பும் சகாயத்தையே முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் உறுதிபடக் கூறியுள்ளனர்.
ரஜினி தனிக் கட்சி தொடங்கினால்
இதுகுறித்து ரஜினி தனிக் கட்சி தொடங்கி சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமா? என்ற கேள்வியை நமது வாகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு பெரும்பாலான வாசகர்கள் அறிவிக்க வேண்டும் என்று அடித்துக் கூறியுள்ளனர்.
நல்ல யோசனை, ரஜினி உடனே இதை செய்யனும்
இது நல்ல யோசனை, ரஜினி உடனே இதைச் செய்யனும் என்ற பதிலுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது விழுந்த வாக்குகளில் 84.33% வாக்குகள் இதற்கே கிடைத்துள்ளன.
கூடாது, ரஜினியே முதல்வர் வேட்பாளராகனும்
சகாயம் தேவையில்லை. ரஜினியே முதல்வர் வேட்பாளராகனும் என்ற பதிலுக்கு ஆதரவு தெரிவித்தோர் 15.67% பேர் மட்டுமே.
மக்கள் மனம் கவர்ந்த சகாயம்
ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக தனது செயல்பாடுகளால் கவர்ந்தவர். ஊழல் கறை படியாதவர், லஞ்சத்துக்கு பரம விரோதி. நேர்மையானவர். அதை விட முக்கியமாக யாருக்கும் அஞ்சாதவர். இதனால்தான் சகாயம் மக்கள் மனதில் வீற்றுள்ளார்.
சகாயத்துடன் சேர்ந்தால்தான்
எனவேதான் மக்கள் மனதைப் பிரதிபலிக்கும் வகையில், சகாயத்தையே முதல்வர் வேட்பாளராக ரஜினி அறிவிக்க வேண்டும் என்று நமது வாசகர்களும் அடித்துக் கூறியுள்ளனர்.
ரஜினி தனிக் கட்சி தொடங்கி சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமா?