For Quick Alerts
For Daily Alerts
Just In
வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ராமமோகன் ராவ் மகன் விவேக் ஆஜர்!
ராமமோகன் ராவ் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பாக இன்று ஆஜரானார். அவரிடம் வருமான விவரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
சென்னை: வருமான வரித்துறை சம்மனைத் தொடர்ந்து முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ் மகன் விவேக் இன்று ஆஜரானார்.
தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன் ராவ் வீடு, அவரது மகன் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் தமிழக அரசின் தலைமை செயலகத்திலும் அதிரடி சோதனை நடத்தி ராமமோகன் ராவ் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ராமமோகன் ராவ், அவரது மகன் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தனர்.
இதனிடையே ராமமோகன் ராவ் சோதனைக்கு எதிராக அதிரடியாக பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் இன்று ராமமோகன் ராவ் மகன் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி அவர்களது கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.
Comments
English summary
Former Tamilnadu Chief Secretary Rama Mohan Rao's son Vivek today appeared before Income Tax investigation.
Story first published: Friday, December 30, 2016, 16:50 [IST]