கடும் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் நுழைந்தது விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை!
கேரளாவில் இருந்து தமிழக எல்லையான கோட்டை வாசல் பகுதிக்கு விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வந்து சேர்ந்தது.
Recommended Video
நெல்லை: கேரளாவில் இருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் பகுதிக்கு விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை வந்து சேர்ந்தது.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது.
இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரளா மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகம் வருகிறது.இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
144 தடை ஆணை
இந்த ரத யாத்திரைக்கு எதிராக நெல்லை மாவட்ட கலெக்டரிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழக எல்லையான நெல்லை மாவட்டம் கோட்டை வாசல் பகுதிக்கு ரத யாத்திரை வந்துள்ளது. விஎச்பி ரத யாத்திரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கோட்டை வாசல்
கடும் எதிர்ப்பை மீறி தமிழக அரசு ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக எல்லையான கோட்டை வாசல் பகுதிக்கு ரத யாத்திரை வந்து சேர்ந்தது.
போராட்டம் - கைது
ரத யாத்திரை தமிழகத்தில் நுழைய எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.