For Daily Alerts
Just In
ராமேஸ்வரத்தில் தங்கம் கடத்திய இருவர் அதிரடி கைது - வீடியோ
இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்குத் தங்கம் கடத்திய இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு படகு மூலம் தங்கம் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இலங்கையிலிருந்து அவ்வப்போது ஒரு கும்பல் ராமேஸ்வரத்துக்கு படகு மூலம் தங்கத்தை கடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வந்த படகில் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Recommended Video
Gold detainees arrested in Rameswaram-Oneindia Tamil
ராமநாதபுரம் சுங்கத்துறை இணைய இயக்குநர் ராஜ்குமார் மோசஸ் தலைமையிலான தனிப்படை சிராஜ் மற்றும் ஜாகீர் ஆகிய இருவர் இரண்டு கிலோ தங்கத்தைக் கடத்தி காரில் செல்ல முயலும் போது கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்கள் செல்ல இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Comments
English summary
From srilanka to Rameshwaram two people abducted 2 kg of gold and there arrested by custom police.
Story first published: Tuesday, July 25, 2017, 17:01 [IST]