For Daily Alerts
Just In
ராமநாதபுரத்தில் மணல் சரிந்து 11ம் வகுப்பு மாணவன் பலி
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மணல் சரிந்து 11ம் வகுப்பு மாணவன் மரணமடைந்து இருக்கிறான். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமுதி குண்டாறு பகுதியில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு இருக்கும் பழைய நீர் நிலை ஒன்றில் மணல் அள்ளிய போது, அங்கு வேலை பார்த்த 11ம் வகுப்பு மாணவன் முனீஸ்வரன் மீது மணல் சரிந்து இருக்கிறது.
இதில் மணலில் சிக்கி முனீஸ்வரனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சம்பவ இடத்திலேயே முனீஸ்வரன் மரணமடைந்துள்ளார்.
தற்போது முனீஸ்வரன் உடல் பிரதேச பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.
Comments
English summary
Ramanathapuram school student named Munishwaran died by trapped in Sand. He was studying 11th std.
Story first published: Tuesday, April 3, 2018, 20:33 [IST]