டி.வி.யைக் கொடுத்து குடும்பங்களை கெடுத்தார் கருணாநிதி: ராமராஜன்
மதுரை: உடன் பிறந்த அண்ணனை சேர்க்காத ஸ்டாலின், மகன்களை ஒன்று சேர்க்காத கருணாநிதி எப்படி மக்களை ஒன்று சேர்ப்பார்கள்? என்று நடிகர் ராமராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை திருமங்கலம் தேவர் சிலை அருகே அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா
இந்தியாவுக்கு கிடைத்த ஒரே வீராங்கனை ஜெயலலிதா தான். அவரின் 4 ஆண்டு கால ஆட்சியை பற்றி நாடே பாராட்டிப் பேசுகிறது.
ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகளாக எங்கு இருந்தாராம். அவர் என்னவென்றால் முடியட்டும், விடியட்டும் என்கிறார். அவரது அண்ணனோ நிற்கட்கும், முடியட்டும் என்கிறார்.
கருணாநிதி
உடன் பிறந்த அண்ணனை சேர்க்காத ஸ்டாலின், மகன்களை ஒன்று சேர்க்காத கருணாநிதி எப்படி மக்களை ஒன்று சேர்ப்பார்கள்?
விஜயகாந்த்
விஜயகாந்த் என்ன பேசுகிறார் என தெரியவில்லை. சினிமாவில் மவுசு போனதால் அரசியலுக்கு வந்தார் அவர். அவர் என்ன மக்களுக்கு சேவை செய்யவா வந்தார்?
மோடி
உலகம் பாராட்டும் மோடி ஜெயலலிதாவை பாராட்டுகிறார். ஜெயலலிதா மக்களுக்காக அறிவித்த திட்டங்களை யாராலும் மறக்க முடியாது.
நிலம்
2 ஏக்கர் நிலம் அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தாரே கருணாநிதி, நிலம் கொடுத்தாரா? டி.வி.யை கொடுத்து குடும்பங்களை தான் கெடுத்தார். அம்மாவின் 4 ஆண்டு கால ஆட்சி 400 ஆண்டு கால ஆட்சி ஆகும் என்றார் ராமராஜன்.