முதியோர் உதவித் தொகையை வழங்க கோரி நூதன முறையில் சங்கு ஊதும் போராட்டம்!
இராமேஸ்வரம்: இராமேஸ்வரத்தில் முதியோர் உதவித் தொகையை வழங்க கோரி நூதன போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமேஸ்வரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்த மக்களுக்கு நீண்ட காலமாக ரேசன் கார்டு வழங்காததை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
மேலும், பட்டா கேட்டு மனு செய்த மக்களுக்கு உடன் பட்டா வழங்க கோரியும் , முதியோர்/விதவை/ஆதரவற்றோருக்கு வழங்கிவந்த உதவி தொகையை திடீர் என எவ்வித அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியதை கண்டித்தும் "சங்கு ஊதும் போராட்டம்" நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் என்.பி.செந்தில் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர்என்.கலையரன்,சி.ஆர்.செந்தில்வேல்,மாவட்ட குழு உறுப்பினர்கள் ப.வடகொரியா, எம்.கருணாமூர்த்தி, தாலுகாகுழு உறுப்பினர்கள் அ.சுடலைகாசி, என்.ஜே.மோகன்தாஸ்,அ.அசோக், எம்.செந்தில்,பூமாரி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.