For Daily Alerts
Just In
குளுகுளு சென்னை... வந்து குவியும் வெளிநாட்டுப் பறவைகள்: குஷியில் பறவை ஆர்வலர்கள்
சென்னை: சென்னையில் நிலவும் தட்ப வெப்பநிலையை மனிதர்கள் தான் ரசிக்கிறார்கள் என்றில்லை, இந்த சேதியறிந்த வெளிநாட்டு பறவைகளும் விசா இல்லாமல் சென்னை வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் பறவை ஆர்வலர்கள்.
சமீபத்தில் , 7 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையின் பெரும்பாக்கம் சதுப்பு நிலப் பகுதியில் ஐரோப்பிய கொக்குகளைப் பார்த்து ஆச்சர்யப் பட்ட பறவை ஆர்வலர்கள், தற்போது மேலும், வந்துள்ள சில வெளிநாட்டுப் பறவைகளைப் பார்த்து பரவசமடைந்துள்ளார்கள்.
இந்தப் பறவைகள் எல்லாம் கடந்த பல ஆண்டுகளாக இந்தப்பக்கம் வரவேயில்லையாம். தற்போது நிலவும் தட்பவெப்பமே பறவைகளின் வருகைக்குக் காரணம் என கருத்துத் தெரிவித்துள்ளனர் அவர்கள்.
கடந்த 2007ம் ஆண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பார்த்த நீண்ட கழுத்துடைய சிவப்புக் கால் பறவை இந்தாண்டு மீண்டும் வந்துள்ளதாக அவர்கள் நினைவு கூருகின்றனர்.
Comments
English summary
Birdwatchers in the state are an excited bunch these days. Not only have they spotted a European white stork in Perumbakkam off Old Mahabalipuram Road, a rare sighting of a species that migrates from Europe to tropical wetlands in the winter, but report that other migratory birds, like the pheasant-tailed jacana, the black-headed ibis and spotbilled pelican, have also arrived in the state.