For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப் போகும் ரேஷன் ஊழியர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பள விகிதத்தினை உயர்த்தக் கோரி, நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வருகின்ற பிப்ரவரி 4 ஆம் தேதியன்று மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்து அரசு பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத் நிர்வாகிகள் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போராட்டத்திற்கான முடிவானது சங்க நிர்வாகிகள் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

Ration employees protest on February 4

அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போலவே, கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படவேண்டும் ஆகியவை போன்ற 15 அம்ச கோரிக்கைகளுக்காக கடந்த மாதம் தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது.

ஆனால், அரசு அதற்கு பதிலளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் அக்கோரிக்கைகளை வலியுறுத்து கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வருகின்ற 4 ஆம் தேதியன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மேலும், அடுத்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Ration shop workers planned to protest on this month 4th in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X