For Daily Alerts
Just In
பரோல் நீட்டிப்பு கோரிக்கை நிராகரிப்பு.. மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார் ரவிச்சந்திரன்
15 நாட்கள் பரோல் நிறைவடைந்ததை அடுத்து ரவிச்சந்திரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை: 15 நாட்கள் பரோல் நிறைவடைந்ததை அடுத்து ரவிச்சந்திரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரன் கடந்த 5ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். பரோலில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனின் 15 நாட்கள் பரோல் முடிந்த நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரவிச்சந்திரன் அருப்புக்கோட்டையில் இருந்து அழைத்து செல்லப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை தனது பரோலை ஒரு மாதம் நீட்டிக்குமாறு ரவிச்சந்திரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கைக்கு அரசு எந்த பதிலம் அளிக்காத நிலையில் ரவிச்சந்திரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
Comments
English summary
Ravichndaran's 15 days parole has been completed today. Ravichandran again locked up in Madurai jail.
Story first published: Monday, March 19, 2018, 18:03 [IST]