For Quick Alerts
For Daily Alerts
Just In
96 ஒரு வெங்காயம்.. உரிக்க உரிக்க கண் சிவந்து.. கடைசியில் அழகு!
Recommended Video
உங்களோட '96' அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக்கலாமே!- வீடியோ
சென்னை: நமது வாசகர் சுரேஷ் ஆறுமுகம், 96 திரைப்படம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டது.
#எங்கள் தலைமுறையின் (96)அனுபவங்கள் !!!
முன் குறிப்பு:
உங்களிடம் அசைபோட ஏதாவது பொக்கிஷங்கள் இருந்தே ஆக வேண்டும்
- சில நிகழ்வு / தருணம் / திரைப்படம் தான் காலப்போக்கில் மறந்து / மறுத்து / மரித்து போன நினைவுகளை மீண்டும் அசைபோட வைக்கும் இந்த படம் அந்த வகையறா.
- 80 + 90 தலைமுறைகளின் வாழ்வியலை இவ்வளவு நேர்மையா இதுவரை யாரும் சொன்னதில்லை. ஆமாம், அப்ப அப்படித்தான் கூட படிக்கும் சக மாணவிகளை எப்படி கூப்பிடுவது என்றே தெரியாது ... ஏய் என்றா / வாடி என்றா / இல்ல பேர் சொல்லியா இப்படி குழப்பத்திலே போயிடும்.
- இக்கால சினிமாவுக்கான எந்த வரைமுறையும் இல்ல ஆனாலும் மனதோடு அவ்வளவு நெருக்கமாய் தொட்டு கடந்து போகிறது ஒவ்வொரு கதாபாத்திரமும்.
- அந்த மனிதனின், பாடலை இசையோடு கேட்டால் ஒரு ரகம் - இசை இல்லாமல் கேட்டால் வேறவொரு ரகம். எங்க தலைமுறையின் ஆகப்பெரிய சொத்து ராஜா !!!
- கிட்டத்தட்ட இந்த படம் ஒரு வெங்காயம் போலத்தான். ஒவ்வொரு தோலாய் உரிக்க உரிக்க கண் சிவந்து சமயத்தில் கசியும் இறுதியில் ஒன்றும் இல்லாமலே போகும் அந்த ஒன்றும் இல்லாமை தான் வெங்காயத்திற்கும் + இந்த படத்திற்கும் அழகோ அழகு !!!
- ஓர் இரவு முழுக்க இருவர் மட்டும் கட்டற்ற சுதந்திரத்தோடு, ஆனால் ஒரு காட்சியில் கூட விரசமில்லை அது தான் ஒரு தேர்ந்த பார்வையாளனுக்கு கொடுக்கப்பட்ட மதிப்பு / சன்மானம். மேலும் அக்கால தலைமுறைக்கு கொடுத்த சன்மானம் கூட
அடி டா அவள
உதடா அவள
வெட்றா அவளனு - மாறிப்போன
இம் தலைமுறையில்
மயிலிறகால்
வருடியது எம் தலைமுறை ....
கடந்து வந்த
கால கோலங்களை
கச்சிதமாய் கட்டியம் சொல்லும்
காவியம் .... நினைவலைகளில்
யார் யாரோ !!!
- இந்த படம் ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து பார்த்தது தான் மிகவும் அழகு. ஒரு ஆணை பார்த்து நீ இன்னும் கன்னிப்பயனடா? , நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்டை , அந்த ரம்பா / ஊர்வசி / மேனகா வந்தாலும் பத்திரமா பாத்துக்குவ etc ... இன்னும் இவ்வுலகம் இயங்குவது இம்மாதிரி ரசனையுள்ள பெண்களால் மட்டுமே.
- இந்தவொரு காட்சி அழகியலின் உச்சம், தன் தவறால் சொல்லப்படாத காதலை தான் விரும்பும் படி அந்த காதலை நினைத்தும் பார்க்கும் வேளையில் கண்களில் கண்ணீர் தேங்கி கீழே வழியாமல் இமையில் நிற்பது கொள்ளை அழகு
- படம் முடிந்து வெளிவரும் வேளையில் ஒரு பேரமைதி மனதுக்குள். மனது தானே ஒரு அமைதியை தேடுது சட்டென ஒரு விளையாட்டு திடலில் அமர்ந்தால், முடிந்த படம் மீண்டும் ஆரம்பமாகிறது வெவ்வேறு கதாபாத்திர பெயர்களுடன் !!!
- ஒரு வழியாய் முடிந்து, எப்படி ராமும் ஜானுவும் தத்தமது நினைவுகளை பொக்கிஷமாக பத்திரப்படுத்தி விட்டு பக்குவமாய் பிரிந்தார்களோ அப்படியே செய்து விட்டு கிளம்பியாச்சு வீட்டில் சிவகாமியும் + யுவனும் காத்திருப்பார்கள் !!!
பின் குறிப்பு:
குறையென்று சொல்ல முடியாது ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால், கடைசி வரை எங்கள் தலைமுறையின் காதலியை சேலையில் காட்டவே இல்லை
Comments
English summary
Our reader Suresh's take on 96 movie .