அழகழகான கொலு.. அசத்தலான பொம்மைகள்.. ஒன்இந்தியா வாசகர்களின் கொண்டாட்டம்
Recommended Video
சென்னை: கொலு கோலாகலம் தொடர்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு விசேஷம்தான். வீடுகள் தோறும் உற்சாகம் கரை புரண்டோடுகிறது.
ஒவ்வொரு தேவியையும் வணங்கி வழிபடும் நவராத்திரி பெண்களுக்கான விழா மட்டுமல்ல, பெண்களை உயர்வாக மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆண்களுக்குள் விதைக்கும் நல்ல விழாவும் கூட.
நமது வாசகர்கள் தத்தமது இல்லங்களில் வைத்திருக்கும் கொலு குறித்த படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து நம்முடன் பகிர்ந்து வருகின்றனர். இதோ இன்னும் ஒரு தொகுப்பு:
திருச்சி உஷா இல்ல கொலு
திருச்சியைச் சேர்ந்த நமது வாசகர் ஜி. உஷா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது வீட்டில் கொலு வைத்து வருகிறார். தனது வீட்டில் இந்த வருடம் வைத்துள்ள கொலு படத்தை நமக்கு அனுப்பியுள்ளார். கொள்ளை அழகாக இருக்கிறது கொலு.
கோடம்பாக்கம் கோதண்டபாணி
நினைவு தெரிந்த நாளில் இருந்து எங்கள் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் உண்டு ...வாங்கள் நீங்களும் பார்த்து வாழ்த்துங்கள்.......கோடம்பாக்கத்திலுருந்து நம் அன்பு வாசகர் கோதண்டபாணி மணி.
ரமானந்தன் - அம்பாசமுத்திரம்
இது நமது அன்பு வாசகர் ரமானந்தன், அம்பாசமுத்திரத்திலிருந்து அனுப்பி வைத்துள்ள படம். அழகான கொலு, வாழ்த்துகள் ரமானந்தன்.
சென்னையிலிருந்து மாதவன்
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நமது வாசகர் மாதவன் தனது வீட்டு கொலு குறித்த புகைப்படத்தை நமக்கு அனுப்பி வைத்துள்ளார்.