For Daily Alerts
Just In
மதுரை: காவல் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் புரோக்கர் வெட்டிக் கொலை- வீடியோ
மதுரை அருகே கொடிக்குளத்தில் பட்டப்பகலில் காவல் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் தரகர் ஜெயராஜ் வெட்டிக் கொலை செய்யப்படட் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
காவல் நிலையம் அருகே தொழிலதிபர் வெட்டிக்கொலை-வீடியோ
மதுரை: காவல் நிலையம் அருகே ரியல் எஸ்டேட் தரகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். சம்பவத்தன்று காலை ஜெயராஜ் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரை மறித்து சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ஜெயராஜ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து அங்கு வந்த போலீசார் ஜெயராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், ஜெயராஜை வெட்டிய மர்மக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயராஜை மர்மக் கும்பல் வெட்டிய இடத்திலிருந்து அருகில்தான் தொலைவில் தான் காவல் நிலையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
A real estate broker killed by unknown persons at Kodikulam in Madurai district.