For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் மைதீன்கான் எம்.எல்.ஏ. விடுதலை

Google Oneindia Tamil News

நெல்லை: சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மைதீன்கான் எம்.எல்.ஏ. வை விடுதலை செய்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாளை சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டி.பி.எம்.மைதீன்கான்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக இவர் மீது அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கனறிஞர் அசன் ஜாபர்அலி என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Relief to Moideen Khan in the case of Bribe to Voters in assembly election

இந்த வழக்கு நெல்லை நீதித்துறை நடுவர் 1-வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 19-ந்தேதி நடைபெற்ற விசாரணையில் மைதீன்கான் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நேற்று (21-ந்தேதி ) தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி ராமலிங்கம் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று தீர்ப்பு அளித்த நீதிபதி மைதீன்கான், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து மைதீன்கானை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

English summary
Relief to Moideen Khan in the case of Bribe to Voters in past assembly election. Nellai JM Court has putt off from the case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X