ரிசோர்ஸ் சாட் -2ஏ வை சுமந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-36
ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் 38வது செயற்கைகோள் ரிசோர்ஸ் சாட்-2ஏ விண்ணில் ஏவப்பட்டது.
சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ரிசோர்ஸ் சாட் -2ஏ செயற்கைக்கோள் இன்று காலை பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று இரவு 10.25 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 10.24 மணிக்கு ரிசோர்ஸ் சாட் -2ஏ செயற்கைக்கோளை எடுத்துச்சென்று பிஎஸ்எல்வி சி-36 வெற்றிகரமான விண்ணில் பாய்ந்தது.
இதன் மூலம் விண்வெளி அறிவியலில் இந்தியா மேலும் ஓர் சாதனை படைத்துள்ளது. ரிசோர்ஸ் சாட் -2ஏ செயற்கைக்கோளை எடுத்துச்சென்ற பிஎஸ்எல்வி சி-36 விண்ணில் நிலை நிறுத்தியது.
AP: PSLV-C36 carrying Resourcesat-2A launched successfully from Satish Dhawan Space Centre SHAR, Sriharikota pic.twitter.com/IoNlSm8Uir
— ANI (@ANI_news) December 7, 2016
இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 817 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம், புவியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம்பிடிக்க உதவுகிறது.
கடந்த 2003ம் அண்டு ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளையும், 2011-ம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2 செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதையடுத்து ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இதனை 1,235 கிலோ எடையில், புவியை கண்காணிக்க மற்றும் தொலை உணர்வுக்காக தயாரிக்கப்பட்டது. இது புவியை கண்காணிக்கை, இயற்கையை படம் பிடிக்க என மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.